Sunday, December 17, 2006

திருப்பாவை திருவெம்பாவை # 3



ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை


திருப்பாவை கேட்க
3:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

மேலும் இப்பாவை பற்றி தேசிகன் அவர்கள் எழுதிய விளக்கம். இங்கே.


ஐயன் மாணிக்க வாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை


முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3

தோழியர்: முத்துப் போன்ற ஒளியான புன்னகையை உடையவளே !எல்லார்க்கும் முன்பாகவே எழுந்திருந்து, "என் அத்தன், ஆனந்தன்,அமுதன்" என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுவாய் !(இன்று என்ன ஆயிற்று உனக்கு ?) வந்து கதவைத் திற ! படுத்திருப்பவள்: பத்து குணங்களை உடையவர்களே !இறைவனின் அடியாகளாய் முதிர்ச்சி பெற்றவர்களே !(என்னிடம்) நட்புடையவர்களே ! புதியவளாகிய என்னுடையகுற்றத்தை நீக்கி என்னையும் அடியார் ஆக்கிக்கொண்டால் குற்றமா ? தோழியர்: நீ இறைவன் பால் வைத்துள்ள அன்பு எங்களுக்குத்தெரியாதா என்ன ? உள்ளம் ஒழுங்கு பட உள்ளவர்கள் நம் சிவபெருமானைப்பாடாது போவாரா என்ன ? எங்களுக்கு இதெல்லாம் தேவை தான் !

1 Comments:

At Sunday, December 17, 2006 8:43:00 PM, Blogger சிவமுருகன் said...

வணக்கம்

சோதனை பின்னூட்டம்.

 

Post a Comment

<< Home