Thursday, December 14, 2006

திருப்பாவை திருவெம்பாவை # 1



ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை


திருப்பாவை கேட்க
1:
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
மேலும் இப்பாவை பற்றி தேசிகன் அவர்கள் எழுதிய விளக்கம். இங்கே.


ஐயன் மாணிக்க வாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை

(திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)
(வெண்டளையான் வந்த இயற்றவிணை கொச்சகக் கலிப்பா)

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 1

தோழியர்: துவக்கம் இறுதி இல்லாத அரிய பெரிய சோதியைநாங்கள் பாடுகின்றொம். அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய கண்களை உடைய நீ தூங்குகின்றாயே ! உன் காதுகள் உணர்ச்சியற்றுப்போய்விட்டனவா ? பெருந்தேவனான சிவபெருமானின் அழகிய கழல்களைவாழ்த்திய வாழ்த்தொலி வீதியின் துவக்கத்தில் கேட்ட அந்தக் கணத்திலேயேவிம்மி விம்மி மெய்ம்மறந்து தான் இருக்கும் மலர் நிறைந்த படுக்கையிலேயேதன்னை மறந்து ஒருத்தி கிடக்கிறாள். அவள் திறம் தான் என்னே ! இதுவோ உன்னுடைய தன்மை, எம் தோழி ?!


மாது - பெண்; வளருதி - தூங்குகின்றாய்; போது - மலர்; அமளி - படுக்கை.

3 Comments:

At Friday, December 15, 2006 8:11:00 PM, Blogger குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் சிவமுருகன். நன்றிகளும்.

 
At Friday, December 15, 2006 8:19:00 PM, Blogger சிவமுருகன் said...

அண்ணா,
நன்றி.

 
At Saturday, December 16, 2006 1:29:00 AM, Blogger மணியன் said...

மார்கழியின் அடையாளமே திருப்பாவையும் திருவெம்பாவையுமே. அதனை நாளும் தர முனைந்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள் !!

 

Post a Comment

<< Home